மார்க்கண்டேய முனிவருக்காக கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் உண்மையில் 24 கோயில்கள் கொண்ட ஒரு தொகுப்பாகும். இந்த கோயில்களின் கட்டமைப்பு கஜுராஹோ கோயில்களின் தன்மையை ஒத்திருப்பது குறிப்பிட்த்தக்கது.
நாக்பூர் பகுதியில் வைன்கங்கா ஆற்றின் கரையில் உள்ள சிறு நகரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த புனித ஸ்தலம் இங்குள்ள சிவலிங்கத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. தவிரவும் அருங்காட்சியகம், இன்ன பிற சுற்றுலா அம்சங்கள், உணவு போன்றவற்றுக்கும் இந்த சிறு நகரம் பெயர் பெற்று விளங்குகிறது.