குர்பதால் எனும் இந்த இடம் தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அழகிய கிராமமானது கடல் மட்டத்திலிருந்து 1635மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இனிமையான பருவநிலை மற்றும் மனம் மயக்கும் ஏரி ஆகியவற்றுக்காக இந்த கிராமம் புகழ்பெற்றுள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கிலும் பயணிகள் ஈடுபடலாம்.
இரும்புப்பொருட்கள் தயாரிப்பிற்காக ஒரு காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்ட குர்பதால் இன்று பசுமையான காய்கறிப்பண்ணைகளுக்கு பெயர் பெற்று அறியப்படுகிறது.