நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் சிறிய மலைதான் நைனாமலை. திருமலைப்பட்டி கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்த மலைக்கு, சற்றே 2 கிமீ தொலைவில் இருக்கும் சேந்தமங்கலம் வழியாகவும் நீங்கள் செல்ல முடியும்.
இந்த நைனாமலையில் வெங்கடாஜலபதி கடவுளின் புகழ் பெற்ற கோவில் ஒன்று உள்ளது. மலையின் உச்சியில அமைந்திருக்கும் இந்த கோவிலை அடைய சுற்றுலாப் பயணிகள் கிட்டத்தட்ட 2500 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.
இப்படி கடினமாக மலையேறிச் செல்ல வேண்டியிருந்தாலும் சக்தி மிக்க இந்த கடவுளை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
சனிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் தமிழ் மாதமான புரட்டாசியில் மிக அதிகமான பக்தர்கள் கூட்டத்தை எதிர் கொள்ளும்.



Click it and Unblock the Notifications