நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்கு அருகிலுள்ள பரசுராம க்ஷேத்திரம் எனும் ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம். இது கபிலா மற்றும் கௌண்டின்யா ஆறுகள் சங்கமிக்கும் இடமாகும்.
இங்கு பரசுராமர் தன் தாயின் தலையை துண்டித்த பாவத்தை கழுவி மனச்சாந்தி பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும் பரசுராமரின் கோடரி சிவனின் தலையில் தவறுதலாக பட்டுவிட்டதால் வருந்திய பரசுராமரிடம் சிவன் தனக்கு இவ்விடத்தில் ஒரு கோயிலைக்கட்டி வழிபடுமாறு உத்தரவிட்டதாக ஐதீகமாய் நம்பப்படுகிறது.
பரசுராம க்ஷேத்திரத்துக்கு வருகை தராமல் நஞ்சன்கூடு பயணம் முற்றுப்பெறாது என்று சொல்லும் வகையில் இது ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது.