ஹிமாச்சல பிரதேசத்தின் நர்கண்டாவில், கடல் மட்டத்திலிருந்து 3350 மீ உயரத்தில் அமைந்திருக்கும் மனம் மயக்கும் சுற்றுலாத்தலம் ஜலோரி கணவாய்.
சட்லெஜ் பள்ளத்தாக்கின் வழியாக லூரி, ஆனி மற்றும் குலு பள்ளத்தாக்கின் கானாக் ஆகிய கண்கவரும் இடங்களை கடந்து அடைய வேண்டிய ஜலோரி கணவாய் நர்கண்டாவில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள இடமாகும்.
இந்த கணவாயிலிருந்து 30 நிமிட நடை பயணத் தொலைவில் அமைந்துள்ள சரோல்சார் ஏரியானது செழுமையான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.
பஞ்சார் பள்ளத்தாக்கில் உள்ள முதன்மையான வழிபாட்டுத் தலமான ஷிரிங்கா ரிஷி கோவில் இந்த கணவாய்க்கு மிக அருகிலுள்ள இடமாகும். புரணாங்களில் வரும் கதைப்படி, இந்த காட்டுப்பகுதியில் உள்ள 'பிண்டி' என்ற புனிதக் கல், இந்த வழியாக செல்லும் ஒவ்வொரு பயணியிடமும் தன்னை கோவிலில் கொண்டு போய் பிரதிஷ்டை செய்யுமாறு கேட்குமாம்.
இந்த கணவாய் குலு பள்ளத்தாக்கினை ராம்பூர், சிம்லா மற்றும் கின்னாருடன் நேரடியாக இணைக்கும் இடமாக உள்ளது. சிம்லாவிலிருந்து மணலிக்கு செல்வதற்கு இந்த கணவாயிலிருந்து செல்லும் பாதையை மோட்டார் பைக் சவாரி செய்வதற்காக தேர்ந்தெடுப்பவர்கள் இந்த மாநிலத்திலேயே மிகச் சிறந்ததாக கருதப்படுகிற இயற்கைக் காட்சிகளை தங்களுடைய பயணத்தின் போது காண்பார்கள்.



Click it and Unblock the Notifications