தானா பெஹ்ராம் எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த குருத்வாரா குர்பர்தாப் எனும் குருத்வாரா ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பஹதூர் சாஹிப்ஜி அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது.
இதற்கான நிலம் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் நிலவிய நீர்ப்பஞ்சத்தை சமாளிப்பதற்காக பாபாஜி அவர்கள் வெட்டிய கிணறு ஒன்றையும் இந்த குருத்வாரா வளாகத்தில் காணலாம். ரஹோன் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள இந்த குருத்வாராவை ஷிரோண்மனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி எனும் குழு நிர்வகித்து வருகிறது.