குருத்வாரா சிங் சபா நவான்ஷாஹர் எனும் எனும் இந்த குருத்வாரா 1928ம் ஆண்டில் 25 உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவின் முயற்சியில் வாங்கப்பட்ட நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து 5 உறுப்பினர்களை கொண்ட மற்றொரு குழு ஒன்று மேலும் அதிகமான நிலப்பகுதியை வாங்கி அதில் தங்கும் அறைகள், அலுவலகம், பள்ளி, லங்கார் சமையலறை மற்றும் 3600 ச.அடி கொண்ட கூடம் ஆகிய கட்டமைப்புகளை எழுப்பியுள்ளது. இங்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் ஷபாத் கீர்த்தன் மற்றும் பாத் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.