மைப்பாடு பீச் எனப்படும் இந்த கடற்கரை நெல்லூரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. மைப்பாடு கடற்கரைக்கு செல்லும் சாலை நன்கு பராமரிக்கப்பட்டு காணப்படுகிறது. எனவே சிரமமில்லாமல் நெல்லூரிலிருந்து இந்த கடற்கரையை சென்றடையலாம். நீண்ட கடற்கரையைக் கொண்டிருக்கும் இப்பகுதியில் அதிகம் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட் விடுதிகள் இல்லை.
நிசப்தம் வழியும் இந்த கடற்கரையில் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பது பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு அற்புதமான அனுபவமாகும்.
பயணத்துக்கு வசதியாக நெல்லூரிலிருந்து தினமும் இந்த கடற்கரைக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேகம் குறைவான அலைகளோடு, இதமான தென்றல் வீசும் இந்த கடற்கரைப்பகுதி ஒரு அற்புதமான ஸ்தலமாக பயணிகளுக்கு தோன்றும் என்பதில் ஐயமில்லை.
மேலும், அமைதிச்சூழல் தவிர்த்து ஆரவாரமான பொழுதுபோக்குகள் எதுவும் இந்த கடற்கரைப்பகுதியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெல்லூர் விஜயத்தின்போது ஒரு அமைதியான சிறு ஓய்வெடுப்புக்கு இந்த கடற்கரை ஸ்தலம் மிகவும் ஏற்றதாகும்.