இந்த நேலபட்டு பறவைகள் சரணாலயம் புலிகாட் ஏரியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரையை ஒட்டியே நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 50 கி.மீ தூரத்திலேயே உள்ளதால் சென்னையிலிருந்தும் மிக எளிதாக இந்த நேலபட்டு பறவைகள் சரணாலயத்துக்கு செல்லலாம்.
பல அரிய பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் சரணாலயமாக இது விளங்குகிறது. சில அழிந்து வரும் இனங்களும் இங்கு வசிப்பது குறிப்பிடத்தக்கது. சின்ன நீர்க்காகம், வண்ணக்கொக்கு, அரிவாள் மூக்கன், புள்ளி கூழைக்கடா போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை உள்ள பருவம் இந்த பறவைகள் சரணாலயத்துக்கு விஜயம் செய்ய உகந்ததாகும். பெரும்பாலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கூட்டமாக கூடி வசிக்கும் பறவைகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.