தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நடைபாதைத் தடைப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சமீபத்தில் அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், ரயில் அட்டவணையில் பல மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தச் சரிசெய்தல்களில் ரத்துசெய்தல், திசைதிருப்புதல், குறுகிய கால நிறுத்தங்கள் மற்றும் தொடக்க நிலையங்களில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்!

தெற்கு ரயில்வேயின் நவம்பர் 13 அட்டவணை
தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால், கிட்டத்தட்ட 37 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அகோலா மற்றும் அகோட்டில் இருந்து வரும் 6 ரயில்கள் முழுவதுமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தாவுந்த், நிஜாமாபாத் மற்றும் சிர்பூர் காகஸ்நகர் ஆகிய இடங்களிலிருந்து வரும் மூன்று ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம், நிஜாமுதீன், காத்ரா, கோரக்பூர், புது டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரி, பெங்களூரு, விசாகப்பட்டினம் செல்லும் ரயில்கள் அனைத்தும் திசைதிருப்பிவிடப்பட்டுள்ளன.

அதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் செல்லும் ரயில் நவம்பர் 13 காலை 10:10 க்கு புறப்படுவதற்கு பதிலாக, மதியம் 14:10 அளவில் புறப்படும். தர்பங்கா, தானாபூர், ஜெய்ப்பூரில் இருந்து செகந்திராபாத், ஷிவமோகா மற்றும் கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் சிறிது தாமதமாக புறப்படும் என்றும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ரயில் அட்டவணைகளில் மாற்றம் செய்த தென்னக ரயில்வே
ஃபிக்ஸட் டைம் காரிடார் பிளாக்கின் ஒப்புதலின் காரணமாக நவம்பர் 2024 முழுவதும் ரயில் கால அட்டவணையில் தொடர்ச்சியான மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியானது சில ரயில் பிரிவுகளில் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட அட்டவணையில் முழு ரத்துசெய்தல், குறுகிய கால நிறுத்தங்கள், தொடக்கப் புள்ளிகளில் மாற்றங்கள் மற்றும் பல்வேறு சேவைகளின் மறு திட்டமிடல் ஆகியவை அடங்கும்.
முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட சேவைகள்
ரயில் எண். 16833 மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், நவம்பர் 23 மற்றும் 25 தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து காலை 8:05 மணிக்குப் புறப்படும். மற்ற தேதிகளில் இந்த ரயில் சேவையானது, முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் தொடக்கப் புள்ளிகளில் மாற்றங்கள்
1. ரயில் எண். 06739 காரைக்கால் - திருச்சிராப்பள்ளி டெமு: வழக்கமாக இந்த ரயில் காரைக்காலில் இருந்து புறப்படும், தற்போது நவம்பர் 1 முதல் 30 வரை (திங்கட்கிழமைகள் தவிர) இரவு 11:30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும்.
2. ரயில் எண். 06457 காரைக்கால் - தஞ்சாவூர் பயணிகள்: வழக்கமாக காரைக்காலில் இருந்து புறப்படும் இந்த ரயில், நவம்பர் 1 முதல் 30 வரை (திங்கட்கிழமை தவிர) 14:50 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும்.

3. ரயில் எண். 06891 விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி மெமு: நவம்பர் 6 ஆம் தேதி புறப்படும், விருத்தாசலத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருத்தாசலத்தில் இருந்து புறப்படும்.
4. ரயில் எண். 06689 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள்: நவம்பர் 6 ஆம் தேதி புறப்படும், திருத்துறையூரில் இருந்து 06:19 மணிக்கு புறப்படும். விழுப்புரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருத்துறையூரில் இருந்து புறப்படும்.
மேற்கூறப்பட்ட சேவைகள் யாவும் தொடக்கப் புள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன, பயணிகள் இதற்கு ஏற்றவாறு பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
தாமதமாக புறப்படும் ரயில் சேவைகள்
பல விரைவுச் சேவைகள் புறப்படும் நேரத்தில் மாற்றங்களைச் சந்திக்கும், ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை தாமதங்கள் ஏற்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது, கீழ்க்கண்ட ரயில்கள் யாவும் புறப்படும் நேரங்களில் தாமதங்களை எதிர்கொள்ளும்!
1. ரயில் எண். 20606 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்: நவம்பர் 5 ஆம் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து புறப்படும். இந்த ரயிலானது 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக அதாவது 22:35 மணி நேரத்திற்கு புறப்பட்டு செல்லும்.
2. ரயில் எண். 22671 சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்: நவம்பர் 6 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் 1 மணி நேரம் 35 நிமிடம் தாமதமாக அதாவது 07:35 மணி நேரத்திற்கு புறப்பட்டுச் செல்லும்.
3. ரயில் எண். 22672 மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்: நவம்பர் 6 ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து புறப்படும். இந்த ரயில்1 மணி நேரம் தாமததிற்கு பிறகு, 16:00 மணி நேரம் அளவில் புறப்பட்டு செல்லும்.
பயணிகள் அனைவரும் மேற்கூறிய அட்டவணையை சரிபார்த்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!



Click it and Unblock the Notifications



