நிஜாமாபாத் மாவட்டத்தில் நிஜாமாபாத் நகரத்திலேயே இந்த ஸ்ரீ நீல கண்டேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த கோயில் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட ஒவ்வொரு நாளும் - குறிப்பாக திங்கள்கிழமைகளில் - எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். சிவபெருமான் இங்கு நீலகண்டராக காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
பாற்கடலைக்கடைந்தபோது வெளிப்பட்ட ஆலாகால விஷத்தை விழுங்கி நீலநிறமாக மாறிய கழுத்துப்பகுதியுடன் காட்சியளித்ததால் நீலகண்டர் எனும் ரூபத்தை சிவன் பெற்றார். இது அனைவரும் அறிந்த புராணக்கதைதான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இந்த கோயில் சாதவாஹன வம்சத்தை சேர்ந்த இரண்டாம் சாதகர்ணீ எனும் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலின் கட்டமைப்பும் கோயிற்சிற்பக்கலை பாணியும் வட இந்திய கோயில் மரபை ஒட்டி அமைந்திருப்பது ஒரு விசேஷ அம்சமாகும்.
அந்நாளில் இப்பகுதியில் அதிகமாக வசித்த ஜைன மக்களுக்காக இந்த கோயில் கட்டப்பட்டதே இதற்கு காரணம் என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.