ஷீரடி சாய் பாபாவிற்கான இந்த கோவில், நொய்டாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகப்பெரிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. வார நாட்கள் முழுவதுமே கூட்டம் நிரம்பி வழியும் இந்த கோவிலுக்கு வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அலை மோதுவதாக இருக்கும்.
இந்த சாய் பாபாவின் அருளால் நல்ல ஆரோக்கியமும், வளமும் மற்றும் மகிழ்ச்சியும் கிடைப்பதுடன், தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவில் அழகிய வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் இருக்கும் பொது மருத்துவமனையில் இருக்கம் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் தினந்தோறும் 100 நோயாளிகளுக்காவது சிகிச்சை செய்து வருகிறார்கள்.மேலும், தேவையுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவையும் இந்த கோவிலில் வழங்கி வருகிறார்கள்.
இந்த இடத்தில் ஆழ்ந்த அமைதி மற்றும் மௌனத்தை தரிசிக்கும் பக்தர்களுக்காக தினசரி பூஜைகள், வழிபாடுகள், அர்ச்சனைகள் மற்றும் ஹவான்கள் ஆகியவை கோவில் மூலம் வழங்கப்படுகின்றன.
நாட்டிலுள்ள பல்வேறு சாய் பாபா கோவில்களை மேலாண்மை செய்து வரும் சாய் பாபா மந்திர் சமிதி என்ற அமைப்புதான் இந்த சாய் பாபா கோவிலையும் நிர்வகித்து வருகிறது.