பச்மாரியிலுள்ள சிறு குன்றின் மேல் ஒரு குழுவாக அமைந்துள்ள ஐந்து குகைகளும் பாண்டவா குகைகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இக்குகைகளில் வந்து தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இக்குகைகள் அளவில் சிறியதாகவே காணப்படுகின்றன. இவற்றுள் பெரியதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் கூடியதாகவும் காணப்படும் ஒரு குகை திரௌபதி குடி அல்லது குகை என்று அழைக்கப்படுகிறது. மிகவும் நெரிசலாக இருளடைந்து காணப்படும் குகை, பீமா கோத்தாரி அல்லது குகை என்று அழைக்கப்படுகிறது.
1-ஆம் நூற்றாண்டில், புத்த பிக்ஷுக்களால் கட்டப்பட்ட இக்குகைகள், அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக தொல்பொருளியல் சான்றுகள் உரைக்கின்றன. ஆனாலும், உள்ளூர்வாசிகளிடையே பாண்டவர்கள் பற்றிய புராணமே மிகவும் பிரபலமாக உள்ளது.
பச்மாரி செல்லும் எவரும் இங்கு கட்டாயமாகச் சென்று வர வேண்டும். பாண்டவா குகைகள் இயற்கையே மிக அழகாகச் செதுக்கியது போல் அமையப்பெற்றுள்ள குகைகளாகும்.



Click it and Unblock the Notifications