பிரியதர்ஷினி முனை, பச்மாரி பள்ளத்தாக்கின் முழுக்காட்சியையும் நம் கண்களுக்கு விருந்தாக்கும் ஒரு அழகிய இடமாகும். 1857 ஆம் ஆண்டு கேப்டன் ஃபோர்சித் அவர்கள் இந்த இடத்திலிருந்து தான் பச்மாரியின் இருப்பை கண்டுகொண்டார்.
இது முன்னர் ஃபோர்சித் முனை என்று வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின் ஆங்கிலேயர்கள் இதனை ஒரு மலை வாசஸ்தலம் மற்றும் ஓய்வகமாக மாற்ற மெனக்கிட்டிருக்கின்றனர்.
அவர்தம் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த பின், இது பிரியதர்ஷினி முனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்ப்பதன் மூலம் பச்மாரியின் முழுக்காட்சியையும் காணலாம்.
முக்கியமாக ஹண்டி கோ கணவாய் முழுவதும் நன்றாகக் காணக் கிடைக்கிறது. எழில் கொஞ்சும் சத்புரா மலைத்தொடரில் அஸ்தமிக்கும் சூரியனை கண் குளிரக் காண்பதற்கு இதை விட சிறந்த இடம் வேறொன்றில்லை.