பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு கோட்டை திப்புவின் கோட்டை என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1766-ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி மகாராஜாவால் கட்டப்பட்டது.
பாலக்காடு கோட்டையை பெரும்பாலும் மைசூர் ஆட்சியாளர்களால் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இதற்கு அருகில் கோட்ட மைதானம் என்று அழைக்கப்படும் கோட்டை மைதானம் விசாலமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மைதானத்தில்தான் திப்பு சுல்தானின் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அடைத்து வைக்கும் கோட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மைதானம் இன்று விளையாட்டுகள் மற்றும் பொருட்காட்சிகள் நடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை தவிர பாலக்காடு கோட்டைக்கு அருகில் உள்ள ஹனுமான் கோயில் மற்றும் இந்திய தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் திறந்த வெளி கலையரங்கம் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications