பாலி நகரத்தின் பிரதான மார்க்கெட் பகுதியில் இந்த சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலின் வரலாற்றுப்பின்னணியும், சிற்ப வேலைப்பாடுகளும் இதனை ஒரு புகழ்பெற்ற கோயிலாக அறிய வைத்துள்ளன.
இதன் கோபுர விமான அமைப்பில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோயில் 1209ம் ஆண்டில் குமாரபால் சோலங்கி எனும் குஜராத் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் உள்ளே ஒரு சிவலிங்கம், நந்தி சிலை மற்றும் பார்வதி, கணேசர் ஆகிய தெய்வங்களின் சிலைகளையும் பார்க்கலாம். ராஜ் குமார் பால் சோலங்கி என்பவர் குஜராத் சௌராஷ்டிர ராஜ்ஜியத்திலிருந்து இந்த சிவலிங்கத்தை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளார்.
முகலாய வம்சத்தைச்சேர்ந்த முகமது கஜினி இந்தக்கோயிலை பலமுறை சூறையாடியதாக வரலாற்றுக்குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலின் வளாகத்திலேயே மற்றொரு சிறிய கோயிலையும் பயணிகள் தரிசிக்கலாம்.