பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா நகரில் அமைந்திருக்கும் மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயம், ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் அவர்களால் கி.பி. 52-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்திய துணைகண்டத்தில் உள்ள தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாக மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயம் திகழ்ந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தவிர ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 மற்றும் 2-இல் ஒர்மபெருநாள் எனும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஆயினும் மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயத்தின் மிக முக்கியமான திருவிழாவாக பேஷன் வீக் விழா கருதப்படுகிறது. இத்திருவிழா ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளன்று முடிவடையும்.



Click it and Unblock the Notifications