சீக்கிய அரண்மனை கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் கிலா முபாரக் வளாகம், இந்நகரத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஒட்டு மொத்த பட்டியாலா நகரமும் இந்த கிலா முபாரக் வளாகத்தை சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலா சிங் மகாராஜாவால் 1764-ஆம் கட்டப்பட்ட இந்த வளாகம், பழைய மோடி பாக் அரண்மனை கட்டும் வரை பட்டியாலாவில் வாழ்ந்த ராஜ குடும்பத்தினரின் வாழ்விடமாக விளங்கியது. ஆரம்பத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் மண் கோட்டையாக (கச்சி கர்ஹி) கட்டப்பட்ட இந்த வளாகம் பின்னாளில் வலுவான கோட்டையாக மாற்றப்பட்டது.
இந்த வளாகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது - உள் பகுதி கிலா அன்ட்ரூன் என்றும் வெளிப் பகுதி தர்பார் ஹால் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குள்ள தர்ஷனி கதவு, சிவன் கோவில், கடைகள், அங்கே விற்கப்படும் பாரம்பரிய மிக்க அணிகலன்கள் மற்றும் துணிமணிகள் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன. முகலாய மற்றும் ராஜஸ்தானி ஸ்டைலில் கட்டப்பட்டதாகும் இந்த அரண்மனை.



Click it and Unblock the Notifications