மாசிலாமணி நாதர் கோயில் எனப்படும் இந்த புராதனமான கோயில் 1305ம் ஆண்டில் மாறவர்ம குலசேகர பாண்டியன் எனும் பாண்டியகுல மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்திய தமிழ் மண்ணின் கோயிற்கலை மரபின் உன்னதமான சான்றாய் இக்கோயில் காலத்தே நீடித்து கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறது.
பூம்புகார் நகரை ஒட்டியே தரங்கம்பாடி எனும் மற்றொரு ஊரில் இந்த கோயில் உள்ளது. திருக்கடையூர், தில்லையாடி வழியாக பூம்புகார் செல்வதற்கு முன்னரோ அல்லது திரும்பும் வழியிலோ இக்கோயிலை தரிசிக்கலாம். இக்கோயிலின் முன்புற அமைப்பின் பெரும்பகுதி அலைகளால் சேதப்படுத்தப்பட்டுவிட்டாலும் இதன் பழமையை இன்றும் நாம் கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications