கீர்த்தி மந்திர், மஹாத்மா காந்தி அவதரித்த புனிதமான இடமாகும். மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி, போர்பந்திரில் உள்ள மூன்று தளங்களை உடைய கட்டிடமான புளூ ஹவேலியில், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார்.
தற்போது இக்கட்டிடம், காந்தியின் வாழ்வைப் பற்றிய சில சுவாரஸ்யமான புகைப்படங்கள், காந்தி உபயோகப்படுத்திய சில அரிய பொருள்கள், காந்தியக் கோட்பாடுகள் மற்றும் வாழ்வியலைப் பற்றிய நூல்களைக் கொண்டுள்ள ஒரு நூலகம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.