புனே அருகில், புனேயிலிருந்து சதாரா செல்லும் நெடுஞ்சாலையில் கத்ரஜ் எனும் இட்த்தில் இந்த பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இங்கு 160 வகையான பாம்புகளும் இதர ஊர்வன வகைப் பிரிவைச் சார்ந்த விலங்குகளும் வைக்கப்பட்டுள்ளன. 1986 ல் உருவாக்கப்பட்ட இந்த பாம்பு பண்ணையில் பல அரிய வகைபறவையினங்களும் ஆமைகளும் கூட காணப்படுவது விசேஷம்.
இந்தப்பண்ணையில் வைக்கப்பட்டுள்ள 9 அடி நீளம் கொண்ட கரு நாகம் பார்வையாளர்களை கவர்வது குறிப்பிடத் தக்கது. மேலும் ஒரு அரிய வகை புனுகுப் பூனையும் இங்கு காணப்படுகிறது. இது வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்ட பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் அம்சமாகும்.
இந்த பண்ணையில் நாகபஞ்சமி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பாம்புகள் குறித்த தவறான கருத்துகளை தெளிவு படுத்துவதற்காக இந்த திருவிழா உதவுகிறது. பாம்புப் பண்ணைக்கு அருகில் ஒரு வனவிலங்கு பூங்காவும் தோட்டமும் கூட அமைந்துள்ளது.
மிகக் குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கும் இந்த பாம்பு பண்ணை புதன்கிழமை தவிர்த்து அனைத்து வார நாட்களிலும் காலை 10.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.