புனே மாவட்ட்த்தில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடி அருங்காட்சியகம் ஒரு பிரசித்தி பெற்ற அருங்காட்சியகமாகும். புனேயிலிருந்து கிழக்கில் கோரேகான் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பழங்குடி இனத்தவரின் கலையம்சங்கள் மற்றும் பண்பாட்டு ஆவணங்களின் மையமாக விளங்குகிறது. பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது.
பழங்குடி இனத்தவர் பயன்படுத்திய பல விதமான ஆயுதங்கள், கலைப்பொருட்கள் போன்றவை இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மராய், தண்டேஸ்வர், பாஹிராம் மற்றும் வாஹ்தியோ பழங்குடி வம்சங்களின் படைப்புகள் மற்றும் தொன்மைக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பழங்குடி மக்களின் தெய்வ வழிபாட்டு பழக்க வழக்கங்கள் தொடர்பான பொருட்கள், கைவினைப்பொருட்கள் போன்றவை அவர்கள் நாகரிகம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி நம்மை எளிதில் புரிந்து கொள்ள வைக்கின்றன.
இந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications