புனேயில் அமைந்துள்ள விஸாபூர் கோட்டை லோஹாகட்-விஸாபூர் எனும் இரண்டு கோட்டைகளை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1085 மீ உயரத்தில் காணப்படும் விஸாபூர் கோட்டை பேஷ்வா வம்சத்தின் முதன் மன்னர் பாலாஜி விஸ்வநாத் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
இக்கோட்டைகள் பல நுட்பமான குகை அறைகளையும், தூண்களையும், உயர்ந்த சுவர்களையும் பழமையான வாழிடங்களையும் கொண்டுள்ளது. கோட்டைக்குள் பல இடங்களில் ஹனுமானுக்கான கோயில்கள் காணப்படுகின்றன.
பேஷ்வாக்களின் அரண்மனை ஒன்றும் இக்கோட்டைக்குள் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோட்டையானது சத்வாகனர்கள், சாளுக்கியர்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் போன்ற பல ராஜ வம்சங்களின் ஆட்சியில் பங்கேற்ற பெருமையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.