போகோ வர்த்தன் மடம் என்று பொதுவாக குறிப்பிடப்படும் கோவர்த்தன் மடம், பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சந்நியாசிகளை ஒன்று சேர்க்கும் பொருட்டு ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நான்கு தலைமை மடங்களுள் ஒன்றாகும்.
ரிக் வேதத்தை தன் பொறுப்பில் கொண்டுள்ள கோவர்த்தன் மடம் பூரி நகரினுள்ளே அமைந்துள்ளது. இந்த மடாலயம், ஜகன்னாதர் (பைரவர்) மற்றும் விமலா தேவி (பைரவி) ஆகியோர் மூலக்கடவுளர்களாக வழிபடப்படும் ஜகன்னாதர் கோயிலுடன் சரித்திர ரீதியிலான தொடர்புகளைக் கொண்டுள்ளது.
இந்த மடாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ஆன்மீகம் மற்றும் பற்றற்ற வாழ்வின் தாத்பர்யத்தை நன்கு உணரலாம். ஒரு வேதபாட சாலை, ஒரு யோகா பள்ளி, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வியாயாம ஷாலா, யாத்ரீகர்கள் மட்டுமின்றி பூரியிலேயே வாழும் உள்ளூர்வாசிகளுக்கும் இலவச மருத்துவ சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவ நிலையம் மற்றும் சுமார் 70 பசுக்களின் உறைவிடமாகத் திகழும் ஒரு மாட்டுத் தொழுவம் ஆகியவை இம்மடாலயத்தின் நவீன கால செயல்பாடுகளாகும்.



Click it and Unblock the Notifications