புஷ்கர் ஏரியின் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுவதால், இந்த ஏரி 'தீர்த்தராஜ்' என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒருமுறை வஜ்ர நாப் எனும் அரக்கனை தாமரை பூவினைக் கொண்டு பிரம்மா வதம் செய்தபோது, அத்தாமரை மலரிலிருந்து மூன்று மடல்கள் கீழே விழுந்தன. அதில் ஒரு மடல் புஷ்கர் நகரில் விழுந்த இடமே புஷ்கர் ஏரியாக தோற்றம் கொண்டதாக புராணச் செய்தி கூறுகிறது.
புஷ்கர் ஏரியை சுற்றி 300-க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்திருக்கின்றன. இந்த புனித ஏரியில் பௌர்ணமி தினத்தன்று நீராடினால் ஒருவர் வாழ்வில் செய்த அத்தனை பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவார் என்று நம்பப்படுகிறது. அதோடு இதில் நீராடுவதன் மூலம் சரும வியாதிகள் குணமாவதாகவும் சொல்லப்படுகிறது.