புஷ்கர் ஏரியின் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுவதால், இந்த ஏரி 'தீர்த்தராஜ்' என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒருமுறை வஜ்ர நாப் எனும் அரக்கனை தாமரை பூவினைக் கொண்டு பிரம்மா வதம் செய்தபோது, அத்தாமரை மலரிலிருந்து மூன்று மடல்கள் கீழே விழுந்தன. அதில் ஒரு மடல்...
புஷ்கர் ஏரியின் கரைகளில் அமைந்திருக்கும் பிரம்மா கோயிலை போன்று பிரம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கோயில்களை நீங்கள் இந்தியாவின் ஒரு சில இடங்களில்தான் காண முடியும்.
ஒருமுறை புஷ்கர் நகரில் யாகம் நடத்த எண்ணிய பிரம்மா தன்னுடைய மனைவியான சாவித்திரியை...
ரத்னகிரி குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் சாவித்திரி கோயில் 1687-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் பிரம்மனிடமிருந்து பிரிந்து சென்ற அவர் அவர் மனைவி சாவித்திரிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புஷ்கர் நகரை வந்தடைந்த சாவித்திரி முதன் முதலாக ரத்னகிரி...
ராஜஸ்தானின் புகழ்பெற்ற ஏமெர் கோட்டையை கட்டிய ராஜா மான் சிங்தான் மான் மஹாலையும் கட்டியுள்ளார். இந்த மஹால் புஷ்கர் ஏரிக்கு கிழக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது.
இதன் காரணமாக மான் மஹாலுக்கு வரும் பயணிகள் ஏரியை சுற்றி அமைந்துள்ள மற்ற கோயில்களுக்கும் சென்று...
புஷ்கரில் அமைந்திருக்கும் ராமவைகுந்த் கோயிலை முதல் முறையாக பார்ப்பவர் எவருமே அதன் பேரழகில் சொக்கிப்போவது நிச்சயம். இந்தக் கோயிலை கட்டுவதற்காக தென்னிந்தியாவிலிருந்து மேஸ்திரிகள் வரவழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் 1920-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக்...
புஷ்கரில் உள்ள மூன்று புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் அப்தேஷ்வர் கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்தக் கோயில் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலாகும்.
ஆனால் முகாலய மன்னன் ஔரங்கஜிப் இந்தக் கோயிலை முற்றிலுமாக இடித்து தகர்த்து விட்டான். அதன்பிறகு...
வரஹா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் அப்தேஷ்வர் கோயிலை போன்றே இதுவும் முகலாய மன்னன் ஔரங்கஜிப்பால் முற்றிலுமாக இடித்து தகர்க்கப்பட்டுவிட்டது.
அதன் பிறகு இந்தக் கோயிலை 1727-ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் புதுப்பித்து...
ரங்க்ஜி கோயில் சேத் புரான் மால் கனேரிவால் என்பவரால் 1823-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயில் விஷ்ணு பகவானின் அவதாரமான ரங்க்ஜிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ரங்க்ஜி கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜ்புட் மற்றும் முகாலய...
புஷ்கர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் கால்நடை சந்தை உலகப் புகழ் பெற்றது. இந்த பருவத்தில் புனிதமான புஷ்கர் ஏரியில் நீராடுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கர் நகரை தேடி கூட்டம் கூட்டமாக வருவார்கள்.
புஷ்கர்...
ராஜஸ்தானின் கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்கள் புஷ்கர் கடைவீதியை ஒருமுறை வலம் வந்தால் போதும். இங்கு ராஜஸ்தானிய உடைகள், பொம்மைகள், பூவேலை செய்யப்பட்ட ஆடைகள், வளையல்கள் மற்றும் பாசிமணிகள், பித்தளை பாத்திரங்கள், ராஜஸ்தானிய கைவினைப் பொருட்கள் என்று...
புஷ்கரின் ஒட்டக சஃபாரி பயணிகளுக்கு பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தின் மணற்குன்றுகளில் ஒட்டகப் பயணம் செல்லும் அற்புதமான அனுபவத்தை பெறும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நள்ளிரவு நேரத்தில் இந்த பாலைவங்களில்...