புஷ்கரில் அமைந்திருக்கும் ராமவைகுந்த் கோயிலை முதல் முறையாக பார்ப்பவர் எவருமே அதன் பேரழகில் சொக்கிப்போவது நிச்சயம். இந்தக் கோயிலை கட்டுவதற்காக தென்னிந்தியாவிலிருந்து மேஸ்திரிகள் வரவழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் 1920-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் பல்வேறு தெய்வங்களின் 361 உருவங்களை நீங்கள் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் சாவித்திரி கோயிலை போன்றே இந்தக் கோயிலும் பிரம்மாவின் மனைவி சாவித்திரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டது.