ரத்னகிரி குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் சாவித்திரி கோயில் 1687-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் பிரம்மனிடமிருந்து பிரிந்து சென்ற அவர் அவர் மனைவி சாவித்திரிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புஷ்கர் நகரை வந்தடைந்த சாவித்திரி முதன் முதலாக ரத்னகிரி குன்றில்தான் கால் பதித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தக் கோயில் ரத்னகிரி குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது.
மேலும் புஷ்கர் வந்து சேர்ந்த சாவித்திரி தேவி தன் கணவர் பிரம்ம தேவன் காயத்ரி என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை அறிந்து அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ மறுத்து விட்டதாக புராணம் கூறுகிறது.
சாவித்திரி கோயில் ரத்னகிரின் குன்றின் உச்சியில் பிரம்மா கோயிலுக்கு பின்னால் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக அருகிலுள்ள எழில் கொஞ்சும் ஏரிகளையும், கிராமங்களையும் சாவித்திரி கோயிலிலிருந்து பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். ஆனால் இந்தக் கோயிலை குன்றின் வழியாக ஏறிச் சென்று அடைவதற்கு எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும்.