இராம சேது அல்லது இராமர் பாலம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஆதாம் பாலத்தை இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற உதவிய வானரங்கள் அல்லது குரங்குளின் மூலம் இராமர் கட்டினார். இராமாயணத்தில் இந்த பாலம் சேது பந்தனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
சுண்ணாம்புப் பாறைகளை வரிசையாக நீட்டிவிட்டு தமிழ் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் தீவுகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட இடம் தான் ஆதாம் பாலம்.
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், இப்படியொரு பாலம் இருந்ததையும், அது மனிதர்கள் நடந்து செல்ல வசதியாக இருந்ததையும் புவியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். தற்போது இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் கடல் பகுதி சேதுசமுத்திரம் அல்லது சீ ஆப் தி பிரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ வரலாற்று கதைகளிலும் இந்த பாலம் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. இலங்கையில் இருந்த ஆதாம் சிகரத்தின் உச்சிக்கு சென்று ஒற்றைக் காலில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதற்காக ஆதாம் இந்த பாலத்தைப் பயன்படுத்தி இலங்கையை அடைந்ததாகவும், அதனாலேயே இந்த பாலம் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications