சிவன் கோவிலான பஹரி மந்தி ராஞ்சி மலையின் உச்சியில் 2140 அடி உயரத்தில் உள்ளது. பான்ஸி டோங்கிரி என முன்பு வழங்கப்பட்டபோது இங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் இங்கு குடியரசு விழாவின் போது கொடி ஏற்றப்படுகிறது.
300 படிகள் உள்ள இந்தக் கோவில் வேண்டிய வரத்தை அருளும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. இங்கிருந்து ராஞ்சியை கழுகுப்பார்வையில் பார்க்கலாம். சுற்றுவட்டாரத்தில் பலவகையான மரங்கள் உள்ள இந்த இடத்தில் சரவண மாதத்தில் பக்தர்கள ஜல தார பூஜை செய்கிறார்கள்.