ராணி ஜீல் எனப்படும் இந்த பிரம்மாண்டமான ஏரி மழைநீரை சேமிக்கும் நோக்கத்துடன் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கேந்திரா வித்யாலயா பகுதி மற்றும் கனோஸா கான்வெண்ட் பள்ளி ஆகியவற்றுக்கு இடையே இயற்கையான எழும்பியிருக்கும் இரண்டு மலைப்பீடப்பகுதிகளுக்கு நடுவே இந்த ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏரியில் பயணிகள் படகுச்சவாரி செய்து மகிழலாம்.