நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நகரமான நங்கல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்டு சிறப்பாக பங்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுடன் காணப்படும் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
இந்நகரம் நங்கல் நிக்கு, ஹம்பேவால் மற்றும் தொபேட்டா காலனி ஆகிய மூன்று கிராமங்களின் பகுதியாக இருந்துள்ளது. ஷிவாலிக்குகள் மற்றும் பல்வேறு நதிகளினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நங்கலின் இயற்கை அழகு, காண்போரை கட்டிப்போடக்கூடியதாகும்.
1955 ஆம் ஆண்டில் சட்லெஜ் நதியின் மேல் பக்ரா நங்கல் அணை கட்டப்பட்ட பின்னர் இந்த இடம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த அணையிலிருந்து உருவான அழகிய ஏரி இவ்விடத்தின் பிரதான ஈர்ப்பாகத் திகழ்கிறது.
சுற்றுலாப் பயணிகள் ஜுல்ஃபா மாதா கோயில், குருத்வாரா விபௌர் சாஹிப் மற்றும் ஸ்ரீ பாபா உதோ ஜி மஹாராஜின் வரலாற்று சிறப்புமிக்க கோயில் போன்ற பல்வேறு இதர ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.
ஏராளமான தர்மசாலாக்கள் மற்றும் விடுதிகள் இங்கு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியைப் பற்று கவலை கொள்ளத் தேவையில்லை. ரூப்நகரின் முக்கிய நகரிலிருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள நங்கலை சாலை வழியாக எளிதில் சென்று அடையலாம்.