சபரி மலையில் மற்றுமொரு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் இந்த வாவர் சன்னதி ஆகும். வாவர் ஸ்வாமி எனும் முஸ்லிம் குருவிற்காக இந்த சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே இந்த சன்னதியும் அமைந்துள்ளது. வாவர் ஸ்வாமிக்கும் ஐயப்ப பஹவானுக்குமான தொடர்பு பற்றி பல கதைகள் வழங்குகின்றன. வாவர் ஸ்வாமி ஆரம்பத்தில் ஐயப்பனை எதிர்த்து போரிட்டதாகவும் ஆனால் இந்த யுத்தத்தில் தோற்றுப்போன வாவர் ஐயப்பனின் நண்பனாகவே மாறிவிட்டதாகவும் சொல்லப்படுவது அவற்றில் ஒன்றாகும்.
கருங்கல்லால் ஆன வாவர் ஸ்வாமியின் சிற்பத்தை கொண்டுள்ள இந்த சன்னதியில் ஒரு புராதன வாளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் கறுப்பு மிளகு காணிக்கைப்பொருளாக பக்தர்களால் படைக்கப்படுகிறது.
மேலும் இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது. இரண்டு வேறு மத நம்பிக்கைகளை ஒன்றிணைக்கும் இந்த வாவர் சன்னதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் மத நல்லிணக்க அடையாளமாக வீற்றுள்ளது.



Click it and Unblock the Notifications