பரவச உலகம் – நீர் விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்கா, சேலத்திலுருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள மல்லூருக்கு அருகில் உள்ளது. இப்பூங்காவின் இருப்பிடம், மலைகளுக்கும், மரங்களுக்கும் நடுவே அமையப்பெற்று, குளிர்ச்சியானதாகவும், மனதுக்கு இதமானதாகவும் விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 7 –இல் இது அமைந்துள்ளது.
இங்கு உள்ள விளையாட்டுக்களில், நீர் தேக்கம், மழை நடனம், செயற்குளம், கார்ட் மற்றும் பைக் பந்தயங்கள், விடியோ விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் ஆகியன மிக்க மகிழ்ச்சியூட்டுவனவாக உள்ளன.
மேலும், இங்கு அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சிகள், பனி உலகம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியனவும் உள்ளன. இது, அனைத்து வயதினரும், வாரயிறுதி நாட்கள் மற்றும் விடுமுறைகளில் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
இந்த இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா, ஓய்வெடுப்பதற்கும், களிப்பதற்கும் ஏற்றவாறு, அனைத்து வயதினராலும் விரும்பத்தக்க வகையில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications