ஸ்கந்தாஸ்ரமம், சேலம் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகம், ஸ்கந்தா உள்ளிட்ட பல தெய்வங்களுக்கான சந்நிதிகளை உள்ளடக்கியதாக விளங்கியது.
இக்கோயில், 1971-ஆம் வருடம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு மூலக்கடவுள்களாக ஸ்கந்தாவும், அஷ்டதஸபுஜ மஹாலட்சுமியும் இருக்கின்றனர். இதன் மகா மண்டபத்தில், அஷ்டதஸபுஜ மஹாலட்சுமியின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதன் யாகசாலையில், நவராத்திரி, பங்குனி உத்திரம், மற்றும் வைகாசி விசாகம் ஆகிய விழாக்களின் போது, யாகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், காலை 8 மணியளவில் அபிஷேகமும், 11 மணியளவில் தினப்படி பூஜையும் நடைபெறுகின்றன. பூஜைக்குப் பின், பக்தர்கள், ஸ்கந்தா மற்றும் ஸ்கந்தா மாதாவின் அருளை பெற வேண்டுகின்றனர்.