தாரமங்கலம் கோயில், சேலம் நகரிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கைலாசநாதர் கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் இருப்பதனால் இவ்வூர் புகழ்பெற்று விளங்குகிறது.
இக்கோயில், அதன் மிகச்சிறப்பான கட்டுமானம் மற்றும் கற்சிற்பங்களுக்கு மிகவும் பெயர் போனதாகும். ஒரு கல்லால் ஆன பந்தை தன் வாயில் வைத்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ள யாளி சிலை, இக்கோயிலின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
சிவன் மற்றும் பார்வதியை, மன்மதன் நோக்கிய வண்ணம் உள்ள சிலைகள் மற்றும் இராமயண காட்சிகளை விளக்கும் சிலைகள் ஆகியனவும் இங்கு உள்ளன. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இக்கோயில் 10-ஆம் நூற்றாண்டு முதல் இருந்து வருகிறது.
இது “கட்டி முதலி” இராஜபரம்பரையினரால், 17–ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மேலும், இக்கோயிலில் உள்ள பெரிய மண்டபம் மற்றும் குளம் ஆகியவை, அவற்றின் சிற்பத்திறனுக்காக பெரிதும் போற்றப்படுகின்றன. கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான கற்தூண்கள் நிறைய உள்ளன. இதே போன்ற கற்தூண்கள் பல, பூமிக்கு அடியில் இருப்பதாக கூறப்படுகிறது.