இந்தியாவிலுள்ள வன விலங்கு சரணாலயங்களிலேயே அதிக அடர்த்தியில் வனவிலங்குகளை கொண்டிருக்கும் சரணாலயமாக டிபிகார் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.
ஹிராகுட் அணை கட்டப்பட்டதிலிருந்து இந்த பகுதியின் தாவர மற்றும் விலங்கினங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மிகவும் அருகில் அணைக்கட்டு இருப்பதால், போதிய அளவு தண்ணீர்; வசதி இருக்கும் இந்த வனவிலங்கு சரணாலயம் வனவிலங்குகளுக்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.
இந்த சரணாலயத்தை வசிப்பிடமாக கொண்டிருக்கும் வனவிலங்குகள் மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் இந்த பகுதிக்கு பல்வேறு இடம்பெயரும் பறவைகளும் வருகின்றன.
எப்பொழுதும் தண்ணீர் தேங்கியிருக்கும் இந்த சரணாலயத்திற்கு டைவிங் டக் என்னும் வாத்துகள் பெரும் எண்ணிக்கையில் வருவது வழக்கம். கிரேட் கிரஸ்டெட் கிரெப் மற்றும் ரெட் கிரஸ்டெட் போச்சார்டு ஆகிய இடம்பெயரும் பறவைகளும் இந்த சரணாலயத்திற்கு வரும் பறவைகளாக உள்ளன.
இந்த சரணாலயத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் 6 இயற்கையான சுற்றுச்சூழல் - சுற்றுலா குடில்கள், நீங்கள் சில நாட்களே தங்கி இருந்தாலும், இயற்கையை உங்கள் வீட்டின் பின்னால் கொண்டு வந்து சேர்க்கும் இடங்களாகும்.
சம்பல்பூர் வட்டார வன அலுவலரிடம் பெற வேண்டிய அனுமதி மற்றும் இந்த குடிலில் தங்குவதற்கான கட்டணம் ஆகியவை இங்கே செய்ய வேண்டிய செலவினங்களாகும்.