சஞ்சி அருங்காட்சியகம், கிபி 1919ல் சர் ஜான் மார்ஷல் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியகம் அதன் பழைய இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் மைய மண்டபத்தில் 4 பெரிய கேலரிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கேலரிகள் முழுவதிலும் பண்டைய சஞ்சியில் பயன்படுத்தப்பட்டு வந்த பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய மண்டபம் முதல் கேலரியாகச் செயல்படுகிறது.
இந்த கேலரியின் வடக்கு சுவரில் சுங்க கால பண்பாடு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் அந்த சுவற்றில் நாகராஜாவின் படமும் வரையப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும். ஆனால் மற்ற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications