சாபுதாராவில் வசிக்கும் மக்களில் டாங் என்னும் பழங்குடி இனத்தவரின் எண்ணிக்கைதான் மிக அதிகம். எனவே, சாபுதாராவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் டாங் இனத்தவரின் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பிறருக்கு எடுத்தியம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தினுள் நுழைந்தால், இப்பழங்குடி இனத்தவர்கள் பயன்படுத்தும் கையினால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், நடனமாடும்போது அணியும் முகமூடிகள், அவர்கள் அணியும் ஆடைகள், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த பொருள்களை கண்டு ரசிக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட பறவைகளின் உடல்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்கள், அவர்கள் தமது உடலில் குத்திக்கொள்ளும் பச்சை வடிவங்கள் ஆகியவற்றையும் காணலாம்.



Click it and Unblock the Notifications