சேனாபதி கிராமத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த லியை குல்லென் கிராமம். இந்த கிராமத்தின் பெயருக்கு 'கடலின் மக்கள்' என்று பொருளாகும். தொல்பொருள் ஆதாரங்களின் படி 500 வருடங்களுக்கு மேலாக இந்த கிராமம் உள்ளது.
எனவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். வரலாற்றின் படி, வேட்டையாடும் இனத்தினர் இந்த இடத்தை கடந்து செல்லும் போது அழகிய ரோடொடெடிரன்களால் சூழுந்துள்ள தூய்மையான குளத்தைக் கண்டதால் இங்கேயே குடியேறிவிட்டார்கள். அவர்களின் வம்சாவழியினர் தான் இந்த கிராமத்தில் வாழும் மக்கள்.
இங்கே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல உள்ளன. இவைகள் இந்த மக்களின் வரலாற்றை ஆணித்தனமாக எடுத்துரைக்கும். இந்த கிராமத்தில் உள்ள முக்கால் வாசி பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வேட்டையாடுவதை 1930-இல் கைவிட்டுவிட்டனர். இந்த வட்டாரத்தில் உள்ள பிரம்மபுத்ரா நதிக்கு அடுத்து பெரிய நதியாக கருதப்படுவது பாரக் நதியாகும்.



Click it and Unblock the Notifications