சில்வாசாவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இந்த வசோனா லயன் சஃபாரி காட்டுயிர் பூங்கா இப்பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
92 ஹெக்டேர் மொத்தப்பரப்பில் 25 ஹெக்டேர் பரப்பளவில் இந்த காட்டுயிர் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. தாத்ரா & நகர் ஹவேலி காட்டுயிர் சரணாலயத்தின் ஒரு அங்கமாக ஆனால் சுற்றுச்சுவருடன் கூடிய தனிப்பிரிவாக இது அமைந்திருக்கிறது.
ஆசியச்சிங்கம் எனப்படும் சிங்க இனத்திற்கான விசேஷ சரணாலயமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்லே 7 மீட்டர் உயரமுள்ள சங்கிலி வேலிகள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. சஃபாரி வாகனங்கள் செல்வதற்காக 3 கி.மீ நீளமுள்ள ஒரு சாலையும் போடப்பட்டிருக்கிறது.
இந்த பூங்காவில் கிர் சரணாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இயற்கையான சூழலில் சுதந்திரமாக இங்கு அவை உலா வருகின்றன. ஜீப் வாகனங்களில் பாதுகாப்பாக பயணித்தபடி சுற்றுலாப்பயணிகள் இந்த சிங்கங்களை பார்த்து ரசிக்கலாம்.