சியோலிம் நகரம் பாகா, அஞ்சுனா மற்றும் கலங்கூட் போன்ற கேளிக்கை பகுதிகளுக்கு வடக்கிலும், மாபுசா நகரிலிருந்து வடமேற்கு திசையிலும் அமைந்திருக்கிறது. இந்த நகருக்கு வந்து புகழ்பெற்ற சியோலிம் கடற்கரையிருந்து சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் பார்த்து ரசிக்கும் போதுதான் கோவா சுற்றுப்பயணம் முழுமை பெரும்.
சியோலிம் நகரின் குன்றுகளில் முன்பு அதிக எண்ணிகையில் புலிகளும், சிங்கங்களும் வாழ்ந்து வந்தன. இதன் காரணமாகவே சிங்கங்கள் வாழும் பகுதி எனும் பொருள்பட இந்த நகரம் சியோலிம் என்று அழைக்கப்படுகிறது.
சியோலிம் நகருக்கு வரும் பயணிகள் சியோலிம் தேவாலயம், மே டே டியூஸ், அவர் லேடி ஆஃப் சாரோஸ், ஸ்ரீ தத்தா, சத்தேரி கோயில் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
சியோலிம் நகரம் அஞ்சுனா பீச்சுக்கு அருகில் இருப்பதால் அஞ்சுனாவின் புகழ்பெற்ற கர்லீஸ் குடில்களுக்கும், சனிக்கிழமை செகண்ட் ஹேண்ட் மார்கெட்டுக்கும் நீங்கள் சுலபமாக சென்று வர முடியும். அதோடு வாகத்தோர் கடற்கரையையும், சாப்டெம் மீன் சந்தையையும் நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது.
சியோலிம் நகரை கோவா தலைநகர் பனாஜியிலிருந்தும், மாபுஸா, பாகா உள்ளிட்ட வடக்கு கோவா பகுதிகளிருந்தும் வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சியோலிம் நகரை நோக்கி பயணிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.
மேலும் சியோலிம் நகரில் உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த கட்டணம் வாங்கும் விடுதிகள் முதல் 4 நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்து வகையான தங்குநிடங்களும் இருக்கின்றன.