சிர்ஸா நகரத்தின் கிழக்கே 30 கிமீ தொலைவில் தேரா ஜீவன் நகர் அமைந்துள்ளது. இது நாம்தாரி இனத்தவரின் முக்கியமான மதத்தலங்களில் ஒன்றாகும்.
குருவிடமிருந்து 'நாம்', மந்திரம் அல்லது தெய்வீக உச்சாடனங்களைப் பெற்றவர்களும், குருவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தெய்வீக வாழ்வை நடத்துபவர்களும் தான் நாம்தாரிகள் அல்லது புனித பெயர் பெற்றவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
நாம்தாரி இனத்தவரின் தேரா அல்லது வசிப்பிடம் இருக்கும் கிராமம் சிச்சால் என்ற பெயரில் முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. பிரபலமான நாம்தாரி துறவி பிரதாப் சிங்கின் தாயாரான ஜீவன் கௌர் என்பவரின் பெயரால் இந்த இடம் தற்போதைய பெயரைப் பெற்றுள்ளது.
இந்த பிரிவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானின் ஷேக்புரா, சியால்கோட் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்டங்களிலிருந்து, இந்தியப் பிரிவினையின் போது இங்கு வந்து குடியேறியவர்களாவர்.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குர்பானி அல்லது குரு கிரந்த் சாஹிப் படிக்கும் பிரார்த்தனைகள் இங்கு நடைபெறும். இதன் தொடர்ச்சியாக நாம்தாரி இனத்தின் தலைவர் உரையாற்றுவார்.
ஹோலா என்ற திருவிழா, பெரும் பக்தியுடனும் மற்றும் மதிப்புடனும் சேட் பாடி 1 மாதத்தில் (மார்ச் - ஏப்ரல்) ஒவ்வொரு ஆண்டும் இங்கு கொண்டாடப்படும். இந்த பண்டிகையின் முக்கியமான அம்சமாக 11 ரூபாய் செலவில் நடத்தப்படும் குழு திருமணங்களை சொல்லலாம்.



Click it and Unblock the Notifications