இந்த பெயரின் விளக்கப்படி தேரா அல்லது வசிப்பிடமான இந்த கட்டிடம் சூஃபி துறவியான பாபா பூமானின் நினைவாக கட்டப்பட்ட இடமாகும்.
இது ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்திலுள்ள சங்கார் சதானில் அமைந்துள்ளது. பாபா பூமான் காம்போஜ் குடும்பத்தில் பிறந்ததால், இவரைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோரும் காம்போஜ் இனத்தவர் தான்.
பாபா பூமான் என்று பொதுவாக அழைக்கப்பட்ட பாபா பூமான் ஷா, இந்தியாவின் முதன்மையான உடாஸி துறவிகளில் ஒருவராவார். இவர் 14 ஏப்ரல் 1687-ல் பாகிஸ்தானின் ஓகாரா மாவட்டத்தில் உள்ள பெஹோல்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
அப்பொழுது இவருடைய பெயர் பூமியா. இவருடைய பெற்றோர்கள் குரு நானக் மற்றும் உதாஸி பந்த் அல்லது இனத்தைச் சேர்ந்த பாபா ஸ்ரீ சந்த் ஆகியோரிடம் மிகுந்த பக்தியோடு இருந்தனர்.
பிறப்பிலேயே மத உணர்வுடன் இருந்ததால், அவருடை 14-வது வயதில் பாபா பிரியம் தாஸ் உதாஸி பந்த்தினால் தொடங்கப்பட்டு, பாபா பூமான் ஷா என்று அழைக்கப்படலானார்.
இவர் அமைதி மற்றும் சகோதரத்துவம் பற்றிய உரைகளை கீர்த்தனைகள் மற்றும் லேங்கர் இல்லாத உணவுகளுடன் கொடுத்து வரலானார்.
சீக்கியர்களின் 10-வது குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங், இவருடைய லேங்கர் என்றென்றும் நிலைத்து வளரும் என்றும், அதற்கு என்றும் குறை ஏற்படாது என்றும் வாழ்த்தியதாக நம்பப்படுகிறது.
பாபா 1762-ம் ஆண்டில் இறந்து விட்டாலும், அவருடைய கொள்கைகள் அவருக்குப் பின் வந்த மஹன்ட்ஸ் அல்லது மத குருமார்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
பிரிவினைக்குப் பின்னர், பாபா பூமானைப் பின்பற்றி வந்தவர்கள் தங்களுடைய தேராவை சிர்ஸாவில் அமைத்து தங்களின் குருவின் பாதங்களை பின்தொடர்ந்து வந்தனர்.



Click it and Unblock the Notifications