பொதுவாகவே துறவிகளுக்கான சமாதிகள் சதுரம் அல்லது செவ்வக வடிவிலான மேடைகளில் அமைக்கப்படும். கற்கள் அல்லது செங்கலால் கட்டப்படும் சமாதிகளில் அந்த துறவியின் ஆன்மாவிற்கு சொந்தமான மீதமுள்ள சாம்பல் வைக்கப்படும்.
மேலும், அவர்களின் புகைப்படங்கள் அல்லது கல்வெட்டுகள் ஆகியவற்றுடன், அவர் செய்த அரும்பணிகள் பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டிருக்கும்.
சிர்ஸா நகரத்திற்கு மேற்கே, சற்றே அருகாமையில், ரனியா சாலையில், இதைப் போலவே பாபா பிஹாரிக்கான சமாதி ஒன்று உள்ளது. இந்த தலத்தில், சமாதியுடன் சேர்த்து வாடிக்கா என்ற அழகிய தோட்டமும் மற்றும் ஒரு கோவிலும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளில் இந்த சமாதியில் பந்தாரா என்ற இலவச உணவுத் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் போது இசைக் கச்சேரிகள், நடனம், விளையாட்டு, நாடக காட்சிகள், பாடல்கள், கடைகள் மற்றும் பல்வேறு வகையான சுவையான உள்ளூர் உணவு வகைகள், பிரார்த்தனை கூட்டங்கள் என எண்ணற்ற கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றார் போல பல்வேறு பொழுதுபோக்குகளை வழங்குவதால், இது எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த பண்டிகையாக உள்ளது.



Click it and Unblock the Notifications