சிவகாசியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய ஆன்மீக தலமான பராசக்தி மாரியம்மன் ஆலயம் 1923 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழ் மாதமான பங்குனி மாதம், இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும்.
அப்போது இந்த ஆலயம் நன்றாக அலங்கரிக்கப்படும். சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக் கடனை இந்த ஆலயத்தில் செலுத்துவர். இந்த விழா 21 நாள்கள் நடைபெறும்.



Click it and Unblock the Notifications