“தெய்வீக சந்நிதி” என்றும் அழைக்கப்படும் சோம்நாத் மஹாதேவ் கோயில், குஜராத்தின் சோம்நாத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் ஏழு முறை அழிவிற்கு உள்ளாகி, பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளது.
இது சந்திரக் கடவுளான சோமாவினால் தங்கத்தாலும், சூரியக் கடவுளான ரவியால் வெள்ளியிலும், கிருஷ்ண பகவானால் மரத்தினாலும், பின்னர் சோலாங்கி ரஜபுத்களால் கல்லினாலும் கட்டப்பட்டுள்ளது.
இதன் கடைசி புனரமைப்பு, 1951 ஆம் வருடம் நிகழ்ந்துள்ளது. இக்கோயிலின் வளம் கொழிக்கும் செல்வச் செழிப்பும், மகிமையுமே இது ஏழு முறை படையெடுப்புக்கு உள்ளானதற்கு முக்கிய காரணங்களாக இருந்துள்ளன.
இக்கோயில் அதன் நுண்ணிய சிற்பக்கலை வேலைப்பாடுகள், வெள்ளிக் கதவுகள், நந்தி சிலை மற்றும் அதன் நடுப்புறத்தில் அமைந்துள்ள சிவலிங்கம் ஆகியவற்றுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.
இங்கு நடைபெறும் கார்த்திக் பூர்ணிமா திருவிழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். இந்து காலண்டரின் படி இது கார்த்திக் சுதா 14 இல் ஆரம்பித்து சுமார் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.