சாருகீர்த்தி பட்டாரக்கா ஸ்வாமிஜியின் மடாலயமாக கருதப்படும் இந்த ஜைன மடத்திற்கும் பயணிகள் விஜயம் செய்வது நன்று. இந்த மடாலயத்தில் உள்ள கோயில் கருவறையில் சந்திரநாத பஹவானின் சிலை உள்ளது.
மூன்று தளங்களை கொண்ட இந்த ஜைன மடாலயம் 1912ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு மூன்று அறைகளில் வைக்கப்பட்டுள்ள 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலோக மற்றும் கற்சிலைகளையும் பார்க்கலாம்.
நவதேவதை பிம்பா மற்றும் யக்ஷி குஷ்மந்தினிதேவி ஆகிய சிற்பங்களும் இங்குள்ளன. இந்த மடாலயத்தில் உள்ள சிலைகள் பித்தளை, தாமிரம், வெண்கலம் போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் பயணிகள் 400 வருடங்களுக்கு முந்தைய சுவரோவியங்களையும் இங்கு பார்க்கலாம். அருகில் நெருங்கி பார்த்தால் இந்த ஓவியங்கள் ஜைன மன்னரான நாககுமாராவின் வாழ்க்கையையும், பர்ஷ்வநாதா மற்றும் பரதா ஆகியோரின் போதனைகளை குறிக்கும் ‘சாமவசரணா’ எனும் ஓவியச்சித்தரிப்புகளையும் கொண்டிருப்பதை தெரிந்துகொள்ளலாம். தினசரி இந்த மடாலயத்தில் பூஜைகள் மற்றும் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications