ஸ்ரீ நகர் நகரத்திலிருந்து 1100 அடி உயரத்தில் அமைந்துள்ள தாஹ்-இ-சுலைமான் என்று அழைக்கப்படும் சங்கராச்சார்யா மலையின் உச்சியில் சங்கராச்சார்யா கோவில் உள்ளது. இந்து மதத்தில் அழிக்கும் கடவுளாக உருவகப்படுத்தப்படும் சிவ பெருமானின் கோவிலாக இது உள்ளது.
கி.மு-371-ம் ஆண்டு ராஜ கோபாதத்யாரால் கட்டப்பட்டு அவருடைய பெயரிலேயே வழங்கப்பட்டு வரும் இந்த கேரில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே மிகவும் பழமையான கோவிலாக உள்ளது.
ஆதிசங்கரர் இந்த கோவிலிற்கு வந்து தங்கியிருந்த காலத்தில் தான் கோபதாரி என்ற இந்த கோவிலின் பெயர் சங்கராச்சார்யா கோவில் என்று மாற்றப்பட்டது.
டோக்ரா ஆட்சியாளரான மஹாராஜா குலாப் சிங்கினால் பக்தர்களின் வசதிக்காக கற்படிக்கட்டுகள் நிறுவப்பட்டன. 1925-ம் ஆண்டு இந்த கோவிலில் மின் வசதிகள் செய்யப்பட்டது. இந்துக்களின் முக்கியமான மதத்தலமாக இருப்பதுடன், நல்ல தொல்பொருள் சின்னமாகவும் இந்த கோவில் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications