ஸ்ரீரங்கப்பட்டணாவிற்கு வரும் பயணிகள் இந்த பாண்டவபுரா ஸ்தலத்தையும் பார்ப்பது அவசியமாகும். பாறைகளால் ஆன இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இந்த நகரத்திற்கு பாண்டவர்கள் இங்கு வனவாசத்தின் போது சிறிது காலம் வசித்ததால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
பாண்டவர்களின் தாய் குந்திதேவிக்கு இந்த ஸ்தலம் மிகவும் பிடித்திருந்தது என்றும் ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்று காலத்தின்போது திப்பு சுல்தானுக்கு ஆங்கிலேயரை எதிர்த்து போரிடுவதில் உதவ வந்த ஃபிரஞ்சு படையினர் இந்த மலையில் முகாமிட்டிருந்த காரணத்தால் இந்த நகரம் ‘ஃபிரஞ்ச் ராக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பாண்டவபுரா கிராமம் நெல் வயல்கள் மற்றும் கரும்பு வயல்கள் சூழ இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது. விவசாயம் இந்த நகரத்தின் முக்கிய தொழிலாக உள்ளதால் பாண்டவபுரா வழியாக செல்லும் பயணிகள் பலவகையான விவசாயப்பொருட்கள், ஆயுர்வேதப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்களைப்பார்க்கலாம்.